23 ஜூலை 2011

கிளிநொச்சியில் வாக்காளர் அட்டைகளை பறித்துச்செல்லும் ஆயுததாரிகள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான பகுதிகளில் வாக்காளர் அட்டைகள் ஆயுததாரிகளால் ஆயுதமுனையில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சியின் வட்டக்கச்சி, இராமநாதபுரம், மலையாளபுரம், கிருஷ்ணபுரம் உட்பட்ட கிராமங்களுக்கு நள்ளிரவிற்குப் பின்னர் முகம்மூடிகள் அணிந்து மோட்டார் சைக்கிள்களில் சென்றநபர்கள் ஆயுத முனையில் வலுகட்டாயமாக வாக்குச் சீட்டுக்களை மக்களிடம் இருந்து பறிமுதல் செய்து சென்றுள்ளனர்.
இதனைவிடவும் கிளிநொச்சியின் பெருமளவான பின்தங்கிய கிராமங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் இடம்பெற்றிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.ஆயிரக்கணக்கான வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமையால் குறித்த தேர்தலை மீண்டும் நடத்தவேண்டும் என்று மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
வாக்காளர் அட்டைகளை கள்ள வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இராணுவம் பயன்படுத்தலாம் என்று நோக்கர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக