28 ஜூலை 2011

சிங்களத்தை சிக்கவைக்க சனல்4 வெளியிட்டுள்ள புதிய ஆதாரம்!

போரின் இறுதிக்கட்டத்தில் தமிழர்களைக் கொல்வதற்கான கட்டளை மிகவும் மேல்மட்டத்திலிருந்து பிறப்பிக்கப்பட்டதற்கான ஆதாராம் தம்மிடம் உள்ளதென சனல் 4 தொலைக்காட்சியின் இச்செய்தி ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபேய ராஜபக்சவும் படையணிகளின் தலைமையதிகாரி சர்வேந்திர சில்வாவும் உத்தரவிட்டதாக இறுதிப்போர் இடம் பெற்ற போது அங்கிருந்த இரண்டு பேர் சனல் 4க்கு அளித்த புதிய சாட்சியங்களை அது இன்று வெளியிட்டுள்ளது.
சாட்சிதாரிகளில் ஒருவரான இராணுவ அதிகாரி ஒருவர் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சரணடைவதற்கான உத்தரவாதம் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நிலையில், சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களைச் சுட்டுக் கொல்லுமாறு ஜனாதிபதியின் சகோதரரான கோட்டாபேய ராஜபக்ச பிரிகேடியர் சர்வேந்திர சில்வாவிற்கு உத்தரவிட்டதாக சனல் 4க்குத் தெரிவித்துள்ளார்.


பிரிகேடியர் சர்வேந்திர சில்வாவின் 58வது படையணியில் களமுனையில் பணியாற்றிய இன்னொரு சாட்சிதாரர் தேவையான என்ன நடவடிக்கைகளையும் எடுத்து காரியத்தை முடிக்குமாறு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபேய ராஜபக்ச பிரிகேடியர் சர்வேந்திர சில்வாவிற்கு உத்தரவிட்டதாக சனல் 4க்குத் தெரிவித்துள்ளார்.
இது படையினரால் கொல்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியாக விளங்கிக் கொள்ளப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆயுததாரிகளல்லாத தமிழ்ப் பெண்களும் சிறுவர்களும் எவ்வாறு சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பதை தான் கண்ணால் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக