18 ஜூலை 2011

தமிழர் பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வருடன் கிலாரி பேசக்கூடும்?

அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹிலாரி கிளின்டன் மற்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் இலங்கை தொடர்பாக பேசப்படலாம் என அமெரிக்க தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார துணைச்செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
எனினும் ஹிலாரி கிளின்டன் தனது விஜயத்தின் போது, இலங்கை தொடர்பாக பேச மாட்டார் என இந்திய சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள மக்கள் இலங்கை நிலைமைகுறித்து கூடிய அக்கறை செலுத்தியுள்ளதாகவும் அது கிளின்டன் மற்றும் ஜெயலலிதா சந்திப்பில் கட்டாயமான ஒரு அங்கமாக இருக்கும் எனவும் பிளேக் கூறியுள்ளார்.
அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹிலாரி கிளின்டன் இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இந்தியா செல்கிறார். இந்த விஜயத்தின் போது அவர் இரண்டு நாடுகளுக்கு இடையிலான பிராந்திய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரியவருகிறது.
கிளின்டன், தனது இந்திய விஜயத்தின் போது, பிரதமர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக