12 ஜூலை 2011

வாக்குச்சேகரிக்க உந்து உருளியில் பவனி வருகிறார் டக்ளஸ்!

உள்ளூராட்சித் தேர்தலையொட்டி ஆளும் கட்சியின் சார்பில் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சைக்கிள் மூலமான தேர்தல் பிரசாரம் தென்மராட்சி பிரதேசத்தின் ஒரு பகுதியில் நடைபெற்றது.
இந்தப் பிரசாரம் நேற்று பிற்பகல் 3.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணிவரை நீடித்தது.அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் களான மு.சந்திரகுமார், சில்வேஸ்திரி அலன்ரின் மற்றும் ஈ.பி.டி.பியின் தென்மராட்சி அமைப்பாளர் சாள்ஸ், சாவகச்சேரி நகர, பிரதேசசபை ஆகியவற்றின் வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களுமாக 200 க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் இந்தப்பிரசாரப் பணியில் ஈடுபட்டனர்.
இவர்கள் கைதடியில் ஆரம்பித்து கைதடி நுணாவில், மட்டுவில் தெற்கு சந்திரபுரம், மட்டுவில் வடக்கு சரசாலைத் தெற்கு, சரசாலை மத்தி, சரசாலை வடக்கு, கனகம்புளியடி, வேம்பிராய், மந்துவில் கிழக்கு, மந்துவில் மேற்கு ஆகிய கிராமங்கள் தோறும் ஒழுங்கை ஒழுங்கையாக வீடு வீடாகச் சென்று பிரசாரத்தை மேற்கொண்டனர். இந்த சைக்கிள் பிரசாரம் தொடர்ந்து வரணி, கொடிகாமம், மிருசுவில், கச்சாய், கெற்பேலி, அல்லாரை, மீசாலை, சங்கத்தானை, சாவகச்சேரி ஆகிய இடங்களில் இன்னொரு தினத்தில் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக