14 ஜூலை 2011

எவரும் புலிக்குட்டிகளுக்கு பால் வார்க்க முடியாதென்கிறார் அஷ்வர்.

இலங்கையை விற்று இந்திய அரசியல்வாதிகள் தமிழகத்தில் அரசியல் நடத்தி வருகின்றனர் என்று ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் நேற்றுக் குற்றஞ்சாட்டினார்.
காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் சாந்த புஞ்சிஹேவா தொடர்பான அனுதாபப் பிரேரணை மீதான உரை நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்.
அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு,அண்மையில் தமிழகம், காயல்பட்டினம் பகுதிக்கு நான் விஜயம் மேற்கொண்டிருந்தேன். அப்போது இலங்கை நிலைமை தொடர்பாக தமிழக அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டனர். “”ஈழத்தை அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று அவர்கள் கூறினார்கள். ஆகவே, இனிமேலும் எவரும் புலிக்குட்டிகளுக்கு பால் வார்க்க முடியாது.
இலங்கையை விற்று தமிழக அரசியல்வாதிகள் அரசியல் நடத்துகின்றனர். அங்கு தேர்தல் முடிவடைந்துள்ளபோதிலும் தமிழக அரசியல்வாதிகள் இப்படித்தான் பேசி வருகின்றனர். இலங்கையின் உண்மை நிலைமையை அறிய தமிழகத் தலைவர்கள் இங்கு வந்து நேரில் பார்க்கும்படி நான் அழைக்கிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக