26 ஜூலை 2011

தமிழ் மக்களின் தீர்ப்பை இனவாதக்கட்சிகளும்,சிங்களமும் புரிந்துகொள்ள வேண்டும்.

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பினை இனவாதக் கட்சிகளும் சிங்கள மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று புளொட் அமைப்பின் தலைவரும் முன்னாள் எம்.பி. யுமான தர்மலிங்கம் சித்தார்த்தன் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் தீர்வை வழங்க வேண்டுமென்ற சர்வதேசத்தின் அழுத்தத்திற்கு தமிழர்களின் தீர்ப்பானது உந்து சக்தியாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.உள்ளூராட்சி சபைத் தேர்தல் பெறுபேறுகள் தொடர்பாக கருத்துத் தெவிக்கையிலேயே புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெவிக்கையில்: உரிமைகள், அரசியல் தீர்வை வழங்க வேண்டுமென்பதிலேயே தமிழ் மக்கள் அக்கறை காட்டியுள்ளனர்.இதனை அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான இனவாத ரீதி யில் சிந்திக்கும ஜாதிக ஹெல உறுமய மற்றும் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி போன்றவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.அரசாங்கம் மட்டுமல்ல, தென்பகுதி பெரும்பான்மை இன மக்களும் இதனைப் புரிந்து கொள்ளவேண்டும்.
இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டுமென அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன. இந்த அழுத்தத்திற்கு தமிழ் மக்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வழங்கிய தீர்ப்பு மேலும் உந்து சக்தியாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக