04 ஜூலை 2011

ஸ்ரீலங்காவின் கோரிக்கையை நிராகரித்து கொலைக்கள காணொளியை ஒளிபரப்புகிறது ஏ.பி.சி.

செனல்-4 தொலைக்காடசிக்குச் சொந்தமான இலங்கையின் கொலைக்களம் ஆவணக் காணொளியை ஒளிரப்ப வேண்டாமென அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் அவுஸ்திரேலிய ஏபிசி தொலைக்காட்சி சேவையைக் கேட்டிருந்தும் அவரது வேண்டுகோளை நிராகரித்த நிலையில் குறிப்பிட்ட ஆவணப் படத்தை இந்தத் தொலைக்காட்சி நிறுவனம் இன்றிரவு ஒளிபரப்பவுள்ளது.
அவுஸ்திரேலிய நேரப்படி இன்றிரவு இந்த காணொளி காண்பிக்கப்படவுள்ளது இரவு 8.30க்கு இந்த காணொளிக்காட்சி காண்பிக்கப்படவுள்ளது. அத்துடன்நாளை அவுஸ்திரேலிய ஏ பி சி 24 அலைவரிசையில் இரவு 11 மணிக்கும் எதிர்வரும் சனிக்கிழமை இரவு 8.30க்கும் மீள்ஒளிப்பரப்பு செய்யப்படவுள்ளது.
இதேவேளை,இலங்கையில் இனநல்லுறவை மேம்படுத்தும் முகமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும் வேளையில் வெளியிடப்பட்டுள்ள இந்த காணொளி போலியானது என்று உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக