03 ஜூலை 2011

டக்ளஸ் தேவானந்தா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் கொடியேற்றிய கையோடு அமைச்சர் திடீரென தமக்கு மயக்கம் வருவதாக தெரிவித்ததை அடுத்து உடனடியாக யாழ். ஆஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக வைத்தியசாலை தரப்பினர் நேற்றிரவு தகவல் வெளியிட்டன.அவரின் உடல் நிலை தொடர்பான விவரம் எதனையும் தெரிவிக்க வைத்தியசாலை தரப்பினர் மறுத்துவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக