
இலங்கை கடற்படையினரின் இந்த செயற்பாட்டால்; ராமேஸ்வரம் மீனவர்கள் கடும் அதிர்ப்த்தியடைந்துள்ளனர்.
இன்று காலை தனுஷ்கோடி அருகே நாலாம் திட்டு என்ற இடத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சென்ற இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் படகில் இருந்த 14 மீனவர்களையும் அவர்களது படகோடு சேர்த்துக் கடத்திச் சென்று விட்டனர் என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடற்படையிடமிருந்து தப்பி சென்ற மீனவர்கள் இத்தகவலை சக மீனவர்களிடம் தெரிவித்தனர். மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக