04 ஜூலை 2011

இன்றும் தமிழக மீனவர்களை கடத்தியது ஸ்ரீலங்கா கடற்படை.

இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களைக் கடத்தும் நடவடிக்கைகள் அளவே இல்லாமல் தொடர்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் 23 ராமேஸ்வரம் மீனவர்களை கடத்திச் சென்று தமிழகத்தின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து விடுவித்த இலங்கை கடற்படையினர் இன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை கடத்திச் சென்றதாக முறையிடப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரின் இந்த செயற்பாட்டால்; ராமேஸ்வரம் மீனவர்கள் கடும் அதிர்ப்த்தியடைந்துள்ளனர்.
இன்று காலை தனுஷ்கோடி அருகே நாலாம் திட்டு என்ற இடத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சென்ற இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் படகில் இருந்த 14 மீனவர்களையும் அவர்களது படகோடு சேர்த்துக் கடத்திச் சென்று விட்டனர் என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடற்படையிடமிருந்து தப்பி சென்ற மீனவர்கள் இத்தகவலை சக மீனவர்களிடம் தெரிவித்தனர். மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக