12 ஜூலை 2011

சிங்கள தமிழ் ஒற்றுமையை வலுப்படுத்த மகிந்த யாழ் செல்கிறாராம்!

மகிந்த ராஜபக்க்ஷ நாளை மறுதினம் யாழ்ப்பாணம் பயணமாகவுள்ளதாக ஜனாதிபதியின் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் செல்லும் மஹிந்தராஜபக்ச ஐந்து நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அபிவிருத்தித் திட்டம் பற்றி ஆராய்வார் என அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தேர்தல் சூடுபிடித்த நிலையில் ஆளும் கட்சி அமைச்சர்கள் 13 பேர் தமது தேர்தல் பிரச்சாரங்களை யாழில் மேற்கொண்டுவரும் நிலையிலேயே ஜனாதிபதியின் விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமாரை தொடர்புகொண்டு கேட்ட போது யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் யாழ். மக்களையும் அரச உத்தியோகத்தர்களையும் ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.
இம்முறை ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தின் போது சிங்கள தமிழ் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் கோப்பாய் நாவலர் பாடசாலையில் கட்டப்பட்ட கட்டடத்தொகுதியையும், பருத்துத்துறையில் கட்டடம் ஒன்றையும் திறந்து வைப்பார் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
யாழ் விஜயத்தை முடித்துக்கொண்டு 20ம் திகதி கிளிநொச்சி செல்லும் ஜனாதிபதி அங்கு 325 மில்லியன் செலவில் அமைக்கப்படவிருக்கும் சர்வதேச தரத்திலான விளையாட்டரங்குக்கான அடிக்கல்லை நாட்டி வைப்பார் என விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே நேற்றுக்காலை கிளிநொச்சி அரச செயலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக