16 ஜூலை 2011

தமிழக முதல்வருக்கு ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு வேண்டுகோள்.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சராக தமிழகத்திற்கு முதன் முறையாக ஹிலாரி கிளின்டன் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா ஹிலாரிக்கு எதனைக் கூற வேண்டும் என்பது தொடர்பாக ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு பரிந்துரைகள் சிலவற்றை முன்வைத்துள்ளது.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு இரு தலைவர்களும் அங்கீகாரம் வழங்க வேண்டுமெனவும் அமெரிக்கத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு தெரிவித்திருப்பதாக பி.ஆர். இணையத்தளம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் முதற்தடவையாக காலடி எடுத்துவைக்கவுள்ளார். இந்த வாய்ப்பை சிறப்பான முறையில் முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்த வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம் என்று ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்புப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஒபாமாவுக்கான தமிழர்களாகிய நாங்கள் எப்போதுமே உங்களை நேசித்து வருகின்றோம். வட,கிழக்கு இலங்கை தொடர்பான விடயங்களை நீங்கள் ஹிலாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக