22 ஜூலை 2011

சிங்களப்படைளுக்கு தமிழகத்தில் பயிற்சியாம்!

இலங்கையும்,இந்தியாவும் பிராந்திய நலன்,இராணுவ, வர்த்தக நலன்களில் இணக்கமான நாடுகளாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை இராணுவத்தினர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.இந்திய இலங்கை கடற்படைகளின் கூட்டுப் பயிற்சியும் அவ்வப்போது நடந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் குன்னூர் அருகே உள்ள இந்திய இராணுவ பயிர்ச்சி மையத்தில் இலங்கை இராணுவத்தினர் மூன்று நாள் பயிற்சிக்கு வந்துள்ளனர். இவ்வாறு பயிர்ச்சிக்கு வந்துள்ள இலங்கை இராணுவத்தினரை குன்னூர் வெலிங்டன் அருகே உள்ள தனியார் ஓட்டலில் ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், ராணுவ பயிற்சிக் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளதாக கூறப்படுகிறது. என்ன நிகழ்ச்சி என்பது போன்ற விவரங்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இவர்கள் தங்கியுள்ள ஓட்டலைச் சுற்றி, 20க்கும் மேற்பட்ட போலீசார் 'மப்டி'யில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் வருகை குறித்து செய்தி சேகரிப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் ஓட்டல் நிர்வாகம் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. குன்னூரில் உள்ள இராணுவ பயிற்சிக் கல்லூரியில் ஆசியாவில் பல நாடுகளைச் சார்ந்த இராணுவத்தினரும் பயிற்சி பெற்றுச் செல்வது வழக்கம் என சொல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக