18 ஜூலை 2011

ஒட்டுக்குழு வேட்பாளரை நையப்புடைத்த வல்வெட்டித்துறை மக்கள்.

டக்ளஸ் தேவானந்தா, மகிந்த ராசபக்ச ஆகியோரின் படங்கள் பிரசுரிக்கப்பட்ட தேர்தல் பிரசார துண்டுப்பிரசுரத்தை விநியோகித்த வல்வெட்டித்துறை நகரசபைக்கு போட்டியிடும் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி வேட்பாளர் வைரமுத்து பரமானந்தராசா என்பவர் அப்பிரதேச பொதுமக்களால் அடித்து உதைக்கப்பட்டார்.
மிகப்பெரிய கொலைகளையும் பேரிழிவுகளையும் தமிழ் மக்கள் மீது புரிந்த மகிந்த ராசபக்சவின் படம் பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தை விநியோகிக்க வேண்டாம் என பொதுமக்கள் அறிவுரை கூறிய போதிலும் அதை மதிக்காது செயற்பட்டதனாலேயே பிரஸ்தாப வேட்பாளருக்கு இக்கதி ஏற்பட்டது.
இச்சம்பவம் நேற்று மாலை வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது. தமிழினத்திற்கு தலைமை தாங்கிய தலைவன் பிறந்த மண்ணில் உம்மைப்போன்ற துரோகிகளுக்கு இடம் இல்லை என்றும், துரோகம் செய்ய நினைப்பவர்களுக்கு இதுதான் பரிசாக கிடைக்கும் என்றும் வல்வெட்டித்துறை பொதுமக்கள் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி வேட்பாளர் பரமானந்தராசாவுக்கு எச்சரித்துள்ளனர்.
இதேபோன்று பருத்தித்துறை நகரசபைக்கு ஒட்டுக்குழு ஈ.பி.டி.பியின் தலைமை வேட்பாளராக போட்டியிடும் முருகுப்பிள்ளையின் மகன் சிறிபதி முச்சக்கரவண்டியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது அவர் மீது பருத்தித்துறை இளைஞர்கள் சிலர் சேற்று நீரை வீசியதுடன் துரோகிக்கு இங்கு இடமில்லை என துரத்தியதாகவும் பருத்தித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் வலிகாமம் மற்றும் தீவுப்பகுதிகளில் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி மற்றும் மகிந்த தரப்பின் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு பின்னால் செல்லும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதாகவும் யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கின்றன. வல்வெட்டித்துறை, பருத்தித்துறை பகுதிகளான வடமராட்சி மக்களுக்கு இருக்கும் தன்மானம், ரோசம், ஏன் யாழ். நகர் மற்றும் வலிகாமம் தீவுப்பகுதி மக்களிடம் இல்லாமல் போனது என யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக