30 ஜூலை 2011

கோத்தபாயவிற்கு பிரித்தானியா பதிலடி.

ஊடக சுதந்திரத்தில் பிரித்தானிய அரசு ஒருபோதும் தலையீடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சனல் 4 ஊடகம் பொறுப்பற்ற விதத்தில் போலியான ஆவணப்படமொன்றை தயாரித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.
சனல் 4 ஊடக நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் பிரித்தானியாவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பிரித்தானியா ஊடக சுதந்திரத்தில் தலையீடு செய்யப் போவதில்லை என அறிவித்துள்ளது. சனல் 4 ஊடக சுதந்திரம் கொண்டது. ஒவ்வொரு ஜனநாயக அரசாங்கமும் ஊடக சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதே பிரித்தானியாவின் நிலைப்பாடாகும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக