07 ஜூலை 2011

மானிப்பாயில் காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபட்ட கும்பல்!

தமிழ்த் ததேசியக் கூட்டமைப்பு உறுப்பினரின் வீட்டில் இறந்த நாய்களின் சடலங்களை போடப்பட்டுள்ளன. மானிப்பாய் கட்டுடையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலி. தென்மேற்கு பிரதேச சபை வேட்பாளரான ஓய்வுபெற்ற கிராம சேவையாளர் ச.சிவகுமாரின் வீட்டில் நேற்றிரவு மர்ம நபர்கள் சிலரால் நாய் ஒன்று வெட்டப்பட்டு உடல் வீட்டின் வாசற் கதவருகில் போட்டதுடன் நாயின் தலையை தடியில் செருகி வாயிற் கதவில் கட்டியிருந்தனர். வாயிற் கதவையும் அவர்கள் இரும்புச் சங்கிலியால் பிணைத்து பூட்டினால் பூட்டியிருநதனர்.
காலையில் மர்ம நபர்கள் சிலர் காணியின் சுவரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் கிழித்ததுடன், நேற்றிரவு இத்தகைய அட்டகாசத்தை மர்ம நபர்கள் புரிந்ததாகவும் சிவகுமாரால் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக