15 ஜூலை 2011

தமிழ் பக்தர்களை தாக்கிய சிங்களக்காடையர்கள்!

கதிர்காம முருகன் ஆலய உற்சவ விழாவிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட பக்தர்களின் பேரூந்து சிங்களக்காடையர்களினால் தாக்குதலிற்கு உள்ளாகியது.வாழைச்சேனை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து சியாம்பலாண்டுவ பகுதியில் வைத்து நேற்று புதன்கிழமை இரவு கல் வீச்சுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தினால் பயணம் செய்த தமிழ் பக்தர்கள் பலர் காயமுற்றதுடன் பேரூந்தின் கண்ணாடியும் உடைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக