15 மே 2011

எனது பிள்ளையை விடுவிப்பதாக கூறி கருணா குழுவினர் காசு வாங்கினர்.

திருகோணமலையில் 13.05.2011 அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒரு தாயின் சோகக்கதை:
கருணா குழவைச் சேர்ந்த நாதன், சுரங்க என்ற 2 பேர் எனது பிள்ளையை எடுத்து தரலாம் என காசு வாங்கினார்கள்.
2008 மார்ச் 19 ஆம் திகதி எனது மகனை கடத்திக்கொண்டு போய்விட்டார்கள். நாங்கள் எல்லா இடங்களும் அலை அலை என்று அலைந்து திரிஞ்சம். பொலிஸ், ஆமி, நேவி என்று எல்லா இடமும் போய் கேட்டும் எங்கட பிள்ளையை தாங்கள் பிடிக்கயில்லை எண்டு சொல்லியினம். ஆனால் எங்கட வீடுகளுக்கு வந்த சி.ஐ.டீமார் இவ்வளவு காசு தந்தால் பிள்ளையை எடுத்து தருவம் எண்டு சொன்னாங்கள். கருனான்ட ரீமில உள்ளவர்கள் சொன்னார்கள் உங்கட பிள்ளையை நேவிதான் பிடித்தது. இவ்வளவு காசு தந்தால் பிள்ளையை எடுத்து தரலாம் எண்டு அதனால காசும் கொடுத்தோம். ஆனால் எங்களுக்கு எந்த விதமான பலனும் கிடைக்கயில்லை. நாதன், சுரங்க என்ற கருணா குழவைச் சேர்ந்த 2 பேர் என்னட்ட மட்டும் இல்ல எங்கட எல்லாருட்டயும் காசு தந்தால் பிள்ளைகளை விடுவிக்கலாம் என்று சொன்னதனால் பல லட்சம் ரூபாய் கொடுத்து விட்டோம். வாங்கியவர்களை அடையாளம் காட்டுகிறோம். தொலைபேசி இலக்கங்களை தருகிறோம் என்டு சொல்லியும் யாரும் நடவடிக்கை எடுக்ககிறதா தெரியவில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக