09 மே 2011

தென்னாபிரிக்கா பக்கம் திரும்புகிறது பார்வை.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு ஆதரவாக ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் தென்னாபிரிக்காவின் ஆளும்கட்சி வெளியிட்டுள்ள நிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் கவனம் தென்னாபிரிக்கா மீது திரும்பவுள்ளது.
ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் அறிக்கையால் விசனமடைந்துள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு, போருக்குப் பிந்திய நிலைமைகள் தொடர்பாக தென்னாபிரிக்காவுக்கு விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, இராஜதந்திர முனையில் ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலை சமாளிப்பதற்கு கூட்டிணைவான மூலோபாயம் ஒன்று தேவைப்படுவதாக சிறிலங்காவின் மூத்த அமைச்சர் டியு.குணசேகர தெரிவித்துள்ளார்.
தாம் விரைவில் ஆபிரிக்கத் தேசிய காங்கிரசுக்கு நிலைமைகளை விளக்குவோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதனிடையே, தென்னாபிரிக்காவின் ஆளும்கட்சியான ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு பிரிட்டோரியாவில் உள்ள தமது தூதுவர் டி.விஜேசிங்கவிடம் இருந்து விளக்க அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளது.
இந்த அறிக்கையைத் தாம் எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் அரசாங்கங்கள் ஐ.நா அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தென்னாபிரிக்காவில் இருந்து ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியிடம் இருந்தே ஆதரவு அளிக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக