21 மே 2011

எந்த இணக்கப்பாடும் இதுவரையில் ஏற்படவில்லை.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் ஆலோசனைகள் தொடர்பில் இலங்கையிடம் இருந்து பதில் தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுகிறது ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் மார்டின் நெசர்கி இதனை தெரிவித்துள்ளார்.
இன்னர் சிட்டி பிரஸ், நேற்று எழுபபிய கேள்வி ஒன்றின்போதே மார்டின் நெசர்கி இந்த கருத்தை வெளியிட்டார்.
ஏற்கனவே ருவண்டா பிரச்சினையில் பான் கீ மூனுக்கு அதிகாரமில்லை என்ற காரணத்தினால், விசாரணைகளை இடம்பெறவில்லை.அதேபோல இலங்கை தொடர்பிலும் நிபுணர் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட சர்வதேச சுதந்திர பொறிமுறை தவிர்க்கப்படுமா என்று இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பியது.
அத்துடன் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தரப் பிரதிநிதி பாலித கோஹனவுக்கும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனுக்கும் இடையில், நிபுணர் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இணக்கம் ஏற்பட்டுள்ளதா? என்றும் இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பியது.
அதே நேரம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு, பாதுகாப்பு சபை என்பவற்றின் அனுமதியை பெற்ற பின்னரே பான் கீ மூன், நடவடிக்கைகளை மேற்கொள்வாரா? என்ற கேள்வியையும் இன்னர் சிட்டி பிரஸ் எழுப்பியது.
இவை யாவற்றும் ஒரு பதிலை வழங்கிய பேச்சாளர் மார்ட்டின் நெசர்க்கி, இலங்கை தொடர்பான நிபுணர் குழு அறிக்கை, பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்ட பின்னர், அது பகிரங்கப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அது தொடர்பிலான கருத்து இலங்கையிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது
எனவே, அதற்குள் எந்தவிதமான இணக்கப்பாடுகளோ உடன்படிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை என்று குறிப்பிட்டார்.அவ்வாறான இணக்கப்பாடுகள் இருப்பின் அது தொடர்பாக வெளிப்படுத்தப்படும் என்றும் மார்டின் நெசர்க்கி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக