01 மே 2011

பான் கீ மூனுக்கு எதிரான ஸ்ரீலங்காவின் மே தினம்.

இன்று கொழும்பில் நடைபெறும் ஊர்வலத்தில் ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளே அதிகம் காணப்படுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் அவரால் அமைக்கப்பட்ட போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்கள் ஆகியோரை கேவலப்படுத்தும் ஓவியங்களையும், உருவப் பொம்மைகளையும் சிறீலங்கா அரச ஆதரவாளர்கள் அதிகளவில் தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஏற்பாடுகளுக்கான நிதியை சிறீலங்கா அரசே வழங்கியுள்ளது. அதிகளவான ஓவியங்களையும், பொம்மைகளையும் உருவாக்குவதற்காக பெருமளவான அரச ஆதரவாளர்கள் நேற்று (30) இரவு முழுவதும் கண்விழித்து பணியாற்றியதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
இன்று (01) மாலை ஒரு மணியளவில் பொரளையில் உள்ள கம்பல் பிளேசில் ஆரம்பிக்கும் ஊர்வலம் நகர மண்டபத்தை அடையும்போது அங்கு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா உரையாற்றுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் சிறீலங்கா அரச ஆதாரவாளர்கள் ஐ.நாவுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடலாம் என அஞ்சப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக