29 மே 2011

சீனா,ரஷ்யா ஆகிய நாடுகளின் ஆதரவு கோரி நிற்கும் புலம்பெயர் தமிழர்கள்.

ஸ்ரீலங்கா அரசின் இனக்கொலைக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளின் ஓத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டுமென சீனாவிடமும், ரஸ்யாவிடமும் உதவி கோரப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகள் தொடர்பில் சீன மற்றும் ரஸ்ய அதிகாரிகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் விளக்கமளிக்கத் திட்டமிட்டுள்ளதாக இராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டத்திற்கு கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் புலம்பெயர் தமிழர்கள் ஆதரவு கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் உற்பத்திகளை சர்வதேச ரீதியில் விற்பனை செய்ய முடியாத வகையில் தடுப்பதற்கும் சில புலம்பெயர் தமிழர்கள் முயற்சித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை மற்றும் பாதுகாப்புப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் அதனை தடுத்து நிறுத்துவதற்கு இந்தியாவையும், சீனாவையும் இலங்கை அதிகமாக நம்பியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக