
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
வவுனியா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை தொடர் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி வந்த சிறீலங்கா அரசு, அண்மையில் நான்கு கைதிகளை அனுராதபுரம் சிறைக்கும் மாற்றியிருந்தது.
சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வவுனியா சிறையில் உள்ள 200 இற்கு மேற்பட்ட கைதிகள் கடந்த வெள்ளிக்கிழமை (13) உண்ணநிலைப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
ஆனால் கைதிகளின் இந்த ஜனநாயகப் போராட்டத்தின் மீது சிறீலங்கா சிறை அதிகாரிகளும், சிங்களக் காடையர்களும் மேற்கொண்ட தாக்குதலில் பல தமிழ் கைதிகள் காயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் அகிலன் (29) என்பவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக