24 மே 2011

சிங்களத்து அடிமை கே.பி.இந்திய ஊடகத்திற்கு பேட்டி!

விடுதலைப்புலிகளின் தாக்குதல் பட்டியலில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இருந்ததாக விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினரும், தற்போது சிறீலங்கா அரசின் கைக்கூலியாகவும் செயற்பட்டுவரும் கே.பி எனப்படும் சிங்களத்து அடிமை குமரன் பத்மநாதன் நேற்று (23) இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கியுள்ள நேர்காணலை தமிழ் இனத்திற்கு எதிரான போக்கை கொண்ட இந்திய ஊடகங்கள் முதன்மைப்படுத்தி வருகின்றன.
சிறீலங்காவுக்கு இந்திய படையினரை அனுப்பி பல ஆயிரம் தமிழ் மக்களை படுககொலை செய்த இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும், புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டம்மானும் தொடர்ப்புபட்டிருந்ததாக தெரிவித்துள்ள கே.பி, என்ற சிங்களத்து அடிமை அதற்கு தான் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவை விடுதலைப்புலிகள் படுகொலை செய்ய முயன்றதாகவும் அவர் மேலும் தெரிவித்து, போர்க்குற்றவாளி மகிந்தாவுக்கு எதிராக தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அலையை திசைதிருப்பவும் முற்பட்டுள்ளார்.
உலக தமிழ் சமூகத்திற்கு எதிரான கொடூர சிந்தனை கொண்ட இந்திய ஊடகம் ஒன்றே திட்டமிட்டு இந்த நேர்காணலை மேற்கொண்டுள்ளதுடன், அதனை பிரபலப்படுத்தி தமிழ் இனத்தின் மீது சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளை மறைக்கவும் முற்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஊடகம் சிறீலங்கா அரசிடம் இருந்து பெருமளவான நிதியை பெற்றுக்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக புலம்பெயர் தமிழ் மகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக