08 மே 2011

ஐ.நாவுக்கு எதிராக செயற்படக்கூடாது என சீனா,ரஷ்யா அறிவுறுத்தல்.

இலங்கை ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு எதிராக செயற்படக் கூடாது என சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அதன் பணியாளர்களுக்கு நெருக்கடி ஏற்படக் கூடிய வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது என குறித்த இரு நாடுகளும் சுட்டிக்காட்டியுள்ளன.
குறிப்பாக நிபுணர் குழு அறிக்கை பிரசூரிக்கப்பட்டதன் பின்னர் ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் அதன் பணியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை இடம்பெறலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனை அவமரியாதை செய்யும் வகையிலான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தவிர்க்க வேண்டுமென சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவினை வாபஸ் பெற்றுக் கொள்வது தொடர்பில் தீர்மானிக்க நேரிடும் என இரண்டு பலம்பொருந்திய நாடுகளும் வலியுறுத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அரசியல்வாதிகள் ஐக்கிய நாடுகள் அமைப்பை விமர்சனம் செய்யும் வகையிலான கருத்துக்கள் வெளியிடுவதனை தடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் கொழும்புக் காரியாலயம் மற்றும் அதன் பணியாளர்களுக்கு உச்சளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை கவனத்திற் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக