31 மே 2011

அனைத்துலக விசாரணைக்கு நாம் பூரண ஆதரவு வழங்குவோம்.

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு முழுமையான ஆதரவுகளை வழங்கும் எனவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் திருமதி நவநீதம்பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்று (30) ஆரம்பமாகிய அதன் 17 ஆவது கூட்டத்தொடரில் பேசும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு நாம் முழுமையான ஆதரவுகளை வழங்குவோம். சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிபுணர் குழுவின் பரிந்துரைக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு தனது முழுமையான ஆதரவுகளை வழங்கும்.
தற்போது எமக்கு கிடைத்துள்ள புதிய ஆதராங்களின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்வது முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேசயம், பிள்ளையின் கருத்தை தான் வலுவாக ஆதரிப்பதாக ஐ.நாவின் நீதிக்குப்புறம்பான படுகொலைகள் விவகாரப் பிரதிநிதி கிறிஸ்தோப் கெயின்ஸ் தெரிவித்துள்ளார்.
எனினும், அனைத்துலக விசாரணைக்குழு அமைக்கப்படுவதை சீனா, பாகிஸ்தான், கியூபா ஆகிய நாடுகள் எதிர்த்துள்ளன.
இதனிடையே, அனைத்துலக விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கைகளை விடுத்துவரும் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வரிசையில் தற்போது அயர்லாந்தும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக