18 மே 2011

முள்ளிவாய்க்கால் துயர்தனை மறப்போமா நாங்கள்!

ஸ்ரீலங்காவின் பேரினவாத சிங்கள அரசான மகிந்த கும்பல் உலக அராஜக அரசுகளுடன் கூட்டிணைந்து தமிழின அழிப்பை மேற்கொண்ட,காட்டு மிராண்டித்தனமாக என்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட எம் சொந்தங்களை கொன்று வீசிய அந்த படு பாதகத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.உணர்வுள்ள,தன்மானம்மிக்க தமிழரெல்லாம் கொதித்தெழுந்த நாளும் இந்நாளே!ஏன் உலகெங்கும் வாழும் மனிதாபிமானிகளும் கிளர்ந்தெழுந்த நாளும் இந்நாளே!இந்நாளை நாம் நினைவு கூர்வதுடன் அங்கே மரணித்துப்போன ஆயிரமாயிரம் உறவுகளுக்கும் எம் அக வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.மேலும் எமது தாயகத்தில் தன்னாட்சி பெற்ற இனமாக நாம் வாழ்வதற்கு உலக அரங்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை பயன் படுத்தி ஒன்று பட்ட இனமாக ஜனநாயக பாதையிலே எம் வெற்றியை இட்டுச்செல்வோம்.அந்த வெற்றியை எம் வீரர்களுக்கும் மக்களுக்கும் காணிக்கையாக்குவோம்.சர்வாதிகாரம் மேலோங்கி நின்றாலும் இறுதியில் ஜனநாயகமே வெல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக