30 மே 2011

நிபுணர் குழு அறிக்கை நடைமுறைக்கு வரவேண்டும்.

இலங்கையின் கடப்பாடு பற்றிய ஐநா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து சில விடயங்களைப் பேச அனுமதியுங்கள். என ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆiணாயாளர் நவநீதம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 17 ஆவது அமர்வு இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் தனது ஆரம்ப அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா அரச படைகளாலும் விடுதலைப் புலிகளாலும் போரின் இறுதிக்கட்டத்தில் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு எதிராக பாரிய அளவில் இழைக்கப்பட்ட வன்முறைகள் குறித்த நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணையை நடத்தவேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு. அத்தோடு இந்த நிபுணர்குழு மேற்கொண்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எனது கோரிக்கையுமாகும்.
இலங்கை தொடர்பான தனது முன்னைய அக்கறையின் வெளிச்சத்தில் இந்த முக்கியமான அறிக்கையிலுள்ள புதிய தகவல்கள் குறித்து மனித உரிமைக் கவுன்ஸில் தனது எதிர்விளைவை வெளிப்படுத்துவது முக்கியம் என நான் கருதுகிறேன். எனவும் வலியுறுத்தி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக