12 மே 2011

இப்படி ஒரு ஈனத்தமிழன் சுவிசில் இருப்பது உண்மையா?

புலிப் பயங்கரவாதிகளை அழித்ததற்கு நன்றி தெரிவித்து, சுவிற்சர்லாந்தில் இருந்து தமக்கு மின்னஞ்சல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு- நேற்று (11-05-2011) அறிவித்துள்ளது.
சூசை அருளானந்தம் என்ற பெயரில் இந்தக் கடிதம் தமக்கு கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ள சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு, அந்தக் கடிதத்தில் விடுதலைப் புலிகளை அழித்ததற்கு, போர்க்குற்ற நபர்களான சிறீலங்கா அரச அதிபரும், முப்படைத் தளபதியுமான மகிந்த ராஜபக்ச, மற்றும் பாதுகாப்புச் செயலர் கொட்டாபய ராஜபக்ச ஆகியோருபக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உண்மையில் இவ்வாறான ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு அப்பால், ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையும், அதனைத் தொடர்ந்து கிலிகொண்டுள்ள சிறீலங்கா அரசாங்கமும், குறிப்பிட்ட கடிதத்தை ஒரு செய்தியாக்கி வெளியிட்டதன் பின்னணி என்ன என்பது பற்றி புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஆராய வேண்டும்.
உண்மையில் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தால், அனுப்பியவர் ஒரு ஈழத்தமிழனா? அல்லது ஈனத்தமிழனா என்பதையும் கண்டறிய வேண்டும். சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு தமக்கு கிடைத்ததாகக் கூறி வெளியிட்டுள்ள கடிதத்தின் தமிழாக்கம்:
மேன்மை தங்கிய சிறீலங்கா அரச அதிபருக்கு,
அன்புள்ள ஐயா, அருளானந்தம் ஆகிய நான் மன்னாரில் பிறந்து, பின்னர் கந்தானை நாகொடவில் வசித்திருந்தேன். திரு. ஜோர்ஜ் ராஜபக்ச மீன்பிடி அமைச்சராக இருந்த காலத்தில் நான் மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி இருக்கின்றேன். 66 அகவையுடைய நான் தற்பொழுது சுவிசில் வசித்து வருகின்றேன். பயங்கரவாதிகளிடம் இருந்து எனது சகோதரர்களையும், சகோதரிகளையும், உறவினர்களையும் மீட்டதற்காக நன்றி தெரிவிக்கும் நோக்கில் இந்த உளமார்ந்த மடலை வரைகின்றேன். கடந்த அரசாங்கங்களால் செய்ய முடியாது எனக் கூறியதைச் செய்துமுடித்த படையினக்கும், உயிரிழந்த வீரர்களுக்கும், கால்களை இழந்த வீரர்களுக்கும் எனது தலைசாய்த்த வணக்கங்கள். மிக்க நன்றி ஐயா, தாங்கள் ஒருவர்தான் இந்தப் பணியைச் செய்து முடிக்கும் சக்தி கொண்டவர். நீங்கள் உங்கள் கடமையைச் செய்துள்ளீர்கள். ஐரோப்பாவில் வாழும் குட்டிநாய்களைப் பற்றி அசட்டை செய்ய வேண்டாம். குரைக்கிற நாய் கடிக்காது. எனது அம்மா எனக்கு தமிழில் சொல்வார், எப்பொழுது நாய் குரைக்கின்றதோ அது ஒன்று செய்யாது என. அத்துடன், உங்களது இந்த சிறந்த பணிக்கு உதவிய திரு. கோட்டாபய ராஜபக்சவிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். வாழ்த்துக்கள் ஐயா. ஏனது இதயம் நிறைந்த தலைசாய்த்த வணக்கங்கள். நான் இப்பொழுது நிம்மதியாகச் சாக முடியும், காரணம் எனது ஒருயொரு வாழ்நாள் கனவை நீங்கள் நிறைவேற்றி இருக்கின்றீர்கள். அதுதான் புலிப் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட, எப்பொழுதும் எதனையும் ஏற்றுக்கொள்ளாத அரசியல்வாதிகளிடம் இருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றியுள்ளீர்கள். நான் ஐயா தங்கள் உண்மையுள்ள, சூசை அருளானந்தம்

சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள கடிதத்தின் ஆங்கில வடிவம்:
Hon. President of Sri Lanka, Dear Sir, I am Arulanantham a Sri Lankan born at Mannar lived at Nagoda Kandana and worked at the Fisheries Horbour corporation when Mr.George Rajapakse was the Minister of fisheries. I am now 66 years of age living in Switzerland. Through this e-mail comes my sincere thanks for saving my brothers and sisters and my relatives from the terrorist. I also wish to salute our heroes who lost their lives and limbs in this mission which was declared impossible by those past Governments.Thank you very much Sir, you are the one who had the courage to do this job, and you have done your duty. Forget about the tiger pups living in Europe. The barking dogs don’t bite. My mother use to tell this in Tamil, “When the dog barks it doesn’t kill the Cow”. I also wish to thanks Mr. Gothabaya Rajapakse who assisted you in this wonderful job. Well done Sir, my heartfull salute for you. I can die now peacefully. Soosai Arulanantham.
Thank you very much Sir, you are the one who had the courage to do this job, and you have done your duty. Forget about the tiger pups living in Europe. The barking dogs don’t bite. My mother use to tell this in Tamil, “When the dog barks it doesn’t kill the Cow”. I also wish to thanks Mr. Gothabaya Rajapakse who assisted you in this wonderful job. Well done Sir, my heartfull salute for you. I can die now peacefullyBecause you have fulfilled my only dream in my life. That is saving the Tamils from the tiger terrorists and the politicians selected by the same terrorists who will also play the same disk, and they will be never satisfied.
நன்றி :eelamdaily

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக