19 மே 2011

வவுனியாவிலும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள்.

முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளுக்கான இரண்டாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான என்.சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் மற்றும் வவுனியா நகரசபை உறுப்பினர்கள், வன்னிப்பிரதேச பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலதரப்பினரும் இதில் கலந்து கொண்டு தீபம் ஏந்தி மலரஞ்சலி மற்றும் மௌனஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் நினைவுரைகளும் இடம்பெற்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக