20 மே 2011

நெடியவன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன!

நோர்வேயை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் நெடியவனை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பேரின்பநாயகம் சிவபரன் எனப்படும் நெடியவனை கைது செய்து ஒஸ்லோ நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாக நோர்வே ஊடகங்களை ஆதாரம் காட்டி கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நெடியவனுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்து நீதிமன்றில் விசாரிக்கப்பட்டது.
நெடியவனிடம் விசாரணை நடத்துவதற்கு நெதர்லாந்தைச் சேர்ந்த நீதவான் ஒருவரும் ஐந்து சட்டத் தரணிகளும் நோர்வேக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
விசாரணை நடத்தும் நெதர்லாந்து அதிகாரிகளுக்கு நோர்வே அரசாங்கம் உதவிகளை வழங்கி வருவதாக ரிவி2 ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
நெதர்லாந்தில் கைது செய்யப்பட்ட ஏழு விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்தும் நோக்கில் நெதர்லாந்து அதிகாரிகள் நோர்வே சென்றுள்ளனர்.
இதேவேளை, நெடிவனிடம் எவ்வாறான விசாரணகைள் நடத்தப்பட்டன தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளரா, அவருடன் வேறும் எவரும் கைது செய்யப்பட்டனரா என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
தற்போது வந்த தகவலின்படி நெடியவன் அவர்கள் பிணையில் விடுதலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக