17 மே 2011

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் வாடுகின்றனர்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த நூறாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இன்னமும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
2011 ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் 13ம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1139 குடும்பங்கள் மெனிக்பாம் மற்றும் கொடிகாமம் முகாம்களிலிருந்து வெளியேறியுள்ளன.
அநேகமானவர்கள் இடம்பெயர் முகாம்களை விட்டு வெளியேறியுள்ள போதிலும் சொந்த இடங்களில் இன்னமும் மீள் குடியேறவில்லை என ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகார இணைப்புக் காரியாலயம் அறிவித்துள்ளது.
நிலக்கண்ணி வெடி அகற்றப்படாத பிரதேசங்களைச் சேர்ந்த குடும்பங்கள் மட்டுமே இடம்பெயர் முகாம்களில் தொடர்ந்தும் தங்கியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த பலர் தமது சொந்த வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக