28 மே 2011

தளபதி பதுமனை தொடர்ந்து காவலில் வைக்குமாறு ஸ்ரீலங்கா நீதிமன்று உத்தரவு.

விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் கட்டளைத் தளபதி பதுமன் மீது திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பதுமன் என்று அழைக்கப்பட்ட சிவசுப்பிரமணியம் வரதநாதனை தீவிரவாத விசாரணைப் பிரிவு காவல்துறையினர் நேற்று திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி தபகேந்திரன் முன்னிலையில் நிறுத்தியிருந்தனர்.
விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்டக் கட்டளைத் தளபதியாக இருந்த இவர், சிறிலங்கா இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், படையினரை கொன்றதாகவும், குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவருக்கு எதிராக 1979ம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 48வது இலக்கத்தின் விதிமுறையின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதையடுத்து புலிகளின் முன்னாள் தளபதி பதுமனை ஜுலை 26ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக