18 மே 2011

அனைத்துலக நடவடிக்கைக்கான நேரம் வந்துள்ளது.

ஐ. நா நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கும், அதன் பரிந்துரைகளுக்கும் நியூசிலாந்து அரசு பூரண ஆதரவை வழங்கும் எனவும், சிறீலங்கா அரசு நடவடிக்கை எடுக்காது விட்டால் அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுக்கும் எனவும் நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் முரே மக்கலி தெரிவிதிருந்தார் ஆனால் தற்போது அனைத்துலக சமூகத்தின் நடவடிக்கைக்கான நேரம் வந்துள்ளது என நியூசிலாந்தின் கிறீன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெயித் லொக்கே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 28 ஆம் நாள் இடம்பெற்ற விவாதத்தின் போது ஐ.நா அறிக்கை தொடர்பில் நியூசிலாந்தின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் நியூசிலாந்தின் கிறீன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் லொக்கே கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதில் கொடுக்கும்போதே ஐ. நாவின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கும், அதன் பரிந்துரைகளுக்கும் நியூசிலாந்து அரசு பூரண ஆதரவை வழங்கும் என மக்கலி தெரிவித்திருந்தார்.
எனினும் தற்போது ஐ.நா அறிக்கையை சிறீலங்கா அரசு நிராகரித்து வருவதால் அனைத்துலக சமூகம் நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கெய்த் தெரிவித்துள்ளார்.
ஐ.நா அறிக்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் தீர்மானத்தை கொண்டுவந்துள்ளபோதும், விசாரணைகளை சிறீலங்கா அரசிடமே அது விட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவத்தை நாம் கைவிட முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக