14 மே 2011

ஆபத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவுவது நோர்வேயின் நீண்டகால வரலாறு.

விடுதலைப்புலிகளை நோர்வேக்கு அழைத்துவந்து, அவர்களுக்கு அரசியல் புகலிடம் வழங்கும் பணிகளை சிறீலங்காவில் உள்ள நோர்வே தூதரகம் இரகசியமாக மேற்கொண்டிருந்ததாக நோர்வேயை தளமாகக் கொண்ட நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பல வருடங்களாக நோர்வே இந்த பணியை இரகசியமாக முன்னெடுத்து வந்துள்ளது. கொழும்பில் பணியாற்றிய நோர்வே இராஜதந்திரிகள் 12 விடுதலைப்புலிகளுக்கு அரசியல் புகலிடம் வழங்கியுள்ளனர்.
விடுதலைப்புலிகளுக்கு விரைவாக நுளைவு அனுமதிகளை வழங்கி, அவர்களுக்கு தேவையான விமானச்சீட்டையும் நோர்வே தூதரகமே பெற்று, அவர்களை தமது வாகனத்தில் விமானநிலையத்திற்கு கொண்டு சென்று விமானத்தில் ஏற்றிவிட்டுள்ளனர்.
இது இரு நாடுகளினதும் உறவுகளை பாதிக்கும் என நோர்வேயின் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
ஆனால் ஆபத்துக்களை சந்திக்கும் மக்களுக்கு உதவுவது நோர்வேயின் நீண்டகால வரலாறு என நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சரும், சமாதான நடவடிக்கைகளின் முன்னாள் அனுசரணையாளருமான எரிக் சொல்கெய்ம் தெரிவித்துள்ளார்.
நாம் அமைதி முயற்சிக்கான அனுசரணையாளர்களாகச் செயற்பட்டோம். எமது பணிகளில் மனிதாபிமானப் பணிகளும் அடங்கும். எனவே மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் தவறில்லை. சிறீலங்காவில் மக்கள் துன்புறுத்தப்படுவது அதிகம். போரின் இறுதி நாட்களிலும் அங்கு மோசமான வன்முறைகள் இடம்பெற்றிருந்தன என அவர் மேலும் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக