09 மே 2011

ஐ.நாவுக்கு எதிராக யாழில் சிங்களவர்கள் ஊர்வலம்.

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு எதிராக தமிழ் மக்கள் செறிந்துவாழும் யாழ் நகரப்பகுதியில் சிங்கள காடையர்கள் நேற்று (08) ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்த ஊர்வலத்தில் சிறீலங்கா இராணுவத்தினரின் புலனாய்வுப்பிரிவினரும் கலந்துகொண்டிருந்தனர். ஊலவம் சென்ற பாதையால் சென்ற தமிழ் மக்களை வழிமறித்த சிங்கள காடையர்கள், ஐ.நாவுக்கு எதிரான மனுவில் கையொப்பங்களை இடுமாறு மிரட்டி கையொப்பங்களை சேகரித்து சென்றுள்ளனர்.
கையொப்பம் இட மறுத்தவர்களை சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் அச்சுறுத்தியுள்னர். கத்தோலிக்க மதகுருவும் மிரட்டப்பட்டுள்ளார். ஐ.நாவுக்கு எதிராக நடைபெற்ற ஊர்வலத்தில் தென்னிலங்கையில் இருந்த வந்த 50 தொடக்கம் 80 வரையிலான சிங்கள காடையர்கள் பங்குபற்றியிருந்தனர்.
வேம்படி வீதியால் சென்ற இந்த ஊர்வலத்தை கண்ட தமிழ் மக்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு தப்பியோடியபோதும், பேரூந்துக்காக காத்து நின்ற தமிழ் மக்களை மிரட்டி அவர்கள் கையொப்பங்களை பெற்றுள்ளனர்.
சில இடங்களில் கையொப்பம் இடமறுத்தவர்கள் தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளனர் என அவை மேலும் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக