12 மே 2011

ஸ்ரீலங்கா தூதுவரின் கூட்டத்தில் தமிழ் வர்த்தகர்கள்

கனடாவுக்கான சிறீலங்கா தூதுவர் கரு.பரணவிதாணா நடத்திய வர்த்தகசபைக் கூட்டத்தில் கனடாவைத் தளமாகக் கொண்ட பல தமிழ் வியாபாரிகள் கலந்துகொண்டது புலம்பெயர் தமிழ் மக்களிடம் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கடனாவின் ரொறொன்டோ பிரதேசத்தின் மார்க்கம் பகுதியில் உள்ள சரட்டன் ஆடம்பர விடுதியில் கடந்த 30 ஆம் நாள் இந்த கூட்டம் நடைபெற்றிருந்தது. அதில் கனடாவுக்கான சிறீலங்கா தூதுவர் கரு பரணவிதான மற்றும் துணைத்தூதுவர் ஹெரத் ஆகியோருடன் பெருமளவான தமிழ் வியாபாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த சபையின் தலைவராக பணியாற்றி வந்த தமிழரான குல செல்லத்துரை கூட்டத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றியிருந்தார். எனினும் ஓய்வுபெற்றுச் செல்லும் செல்லத்துரையின் இடத்திற்கு மற்றுமொரு தமிழரான கணேசன் சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அந்த குழுவில் றொசான் நவரட்ணம் உட்பட பல சிங்கள இனத்தவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கனடாவில் உள்ள தமிழ் மக்களின் எழுச்சிகளை அடக்குவதற்காக 1990ஆம் ஆண்டு இந்த சபையை சிறீலங்கா அரசு மிகவும் தந்திரமாக அமைத்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக