07 மே 2011

ஸ்ரீலங்காவிற்கான உதவியை அதிகரித்தது ஐரோப்பிய ஒன்றியம்.

ஐரோப்பிய ஆணைக்குழு இலங்கைக்கான தனது மனிதாபிமான உதவித் தொகை யை மேலும் 10 மில்லியன் யூரோவினால் அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இடம்பெயர்ந்த மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்லவும் அவர்களுக்கான அடிப் படை வசதிகள் ஏற்படுத்தப்படுவதை உறுதிப் படுத்துவதற்காகவும் மேலதிக இந்நிதி அளிக் கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இம் மேலதிக நிதியானது இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் மற்றும் இவ்வருட ஆரம் பத்தில் கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மனிதாபி மான உதவிகளை வழங்கும் எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. ஐரோப்பா இலங்கையில் ஆபத்தை எதிர் நோக்கும் சமூகங்களுக்கு பாரபட்சமின்றி தொடர்ந்து சேவையாற்றும். அத்துடன் இந் நாட்டில் நிவாரண உதவிகளுக்கும் நீண்ட கால அபிவிருத்திக்குமான இடைவெளி யைக் குறைப்பதற்காகவும் செயற்படும் என சர்வதேச ஒத்துழைப்பு மனிதாபிமான உதவி மற்றும் நெருக்கடி பதிலளிப்புக்கான ஐரோப் பிய ஆணையாளர் கிறிஸ்டாலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக