01 ஜூன் 2010

கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எழுபது ஏதிலிகள் மெக்சிக்கோ பொலிசாரால் மீட்பு!



பாரிய கொள்கலன் ஒன்றிற்குள் அடைத்து மறைத்து வைத்து மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்ட சுமார் 70 போ் அடங்கிய அகதிகள் குழுவொன்றை மெக்ஸிகோ பொலிஸார் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
இவர்கள் மத்திய அமெரிக்கா, இந்திய மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் பாரிய கொள்கலன் ஒன்றிற்குள் மறைந்த நிலையில் கௌதமாலா எல்லைப் புறத்தில் வைத்து மீட்கப்பட்டனர்.
X- கதிர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதே இவர்கள் இந்த கொள்கலனுக்குள் மறைந்திருந்தமையை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இவர்களில் 45 ஆண்களும் 15 பெண்களும் அடங்கியிருந்தனர். இதில் 7 இலங்கையர்களும் உள்ளடங்கியிருந்தாக மெக்ஸிகோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சட்ட விரோத குடியேறிகளாக வந்த சுமார் 70 ஆயிரம் பேர் மெக்ஸிகோ தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கபப்பட்டு பின்னர் அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக