15 ஜூன் 2010

இலங்கை இரட்டை வேடம் போடுவதாக பிலிப் அல்ஸ்ரன் குற்றச்சாட்டு.


இலங்கை அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடித்துக் கொண்டிருப்பதாகவும் இது குறித்து சர்வதேச சமூகம் திருப்தி காண முடியாது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் சட்டவிரோதப் படுகொலைகளுக்கான விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் தெரிவித்துள்ளார்.தமது நாட்டின் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்படக் கூடாது என வலியுறுத்தி வரும் இலங்கை மற்றும் இஸ்ரேலின் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது என்றும் குறிப்பிட்டார்.இலங்கை ஜனாதிபதி நியமிக்க உத்தேசித்துள்ள விசாரணைக் குழுவின் நம்பகத் தனமை குறித்து சந்தேகம் தெரிவித்த அஸ்ரன் சர்வதேச ரீதியான விசாரணைகளின் மூலமே உண்மைகளைக் கண்டறிய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக