15 ஜூன் 2010

சல்மான் கானுடன் சிறீலங்கா செல்கிறார் அசின்,தமிழ் திரையுலகம் கடும் கோபம்!


ஈழத்தமிழர்களை ஈவு இறக்கமின்றி கொன்றுகுவித்த இலங்கை மண்ணில் நடைபெற்ற திரைப்பட விழாவில் தமிழுணர்வாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்திய நட்சத்திரங்கள் கலந்துகொள்ளவில்லை.
சல்மான்கான், விவேக் ஓபராய், பிபாஷா பாஷூ போன்ற சில நட்சத்திரங்கள் மட்டும் கலந்துகொண்டனர். இதனால் இலங்கை விழாவில் கலந்துகொண்ட இவர்களின் படங்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா,புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சல்மான்கான் இலங்கையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டதோடு அல்லாமல் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பையும் அங்கே நடத்துகிறார்.
இலங்கை அரசுடன் மிக மிக நெருங்கும் அவர் மீது தமிழுணர்வாளர்கள் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் சல்மான்கானுக்கு ஜோடியாக அப்படத்தில் நடிக்கிறார் அசின். இவர் படப்பிடிப்பிற்காக இலங்கை செல்லவிருக்கிறார்.
விஷயமறிந்த தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு அசின் மீது கடும் கோபத்தில் உள்ளது. தமிழ்ப் படங்கள் மூலம் உயர்ந்த நடிகை அசின், தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பின் முடிவை மீறி இலங்கை செல்வதா என்று கடும் கோபத்தில் உள்ளனர் அமைப்பினர்.
இதனால் நடிகர் விஜய் கலக்கத்தில் இருக்கிறார்.
விஜய்-அசின் நடிப்பில் காவல்காரன் படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. அசின் இலங்கை செல்வதால் தனது காவல்காரனுக்கு சிக்கல் ஏற்படுமோ என்று கலக்கமுற்ற அவர் அசினை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுள்ளாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக