06 ஜூன் 2010

சல்மான் கானின் படங்களுக்கு ஐந்து மாநிலங்களில் தடை!


இலங்கை அரசு சர்வதேச இந்திய திரைப்பட விழாவை கொழும்பு’வில் நடத்தியது. இதற்கு இந்திய திரையுலக கலைஞர்களுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்தது.
தமிழர்களை படுகொலை செய்த இலங்கையில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொள்ளக்கூடாது தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தவர்கள் இவ்விழாவில் கலந்துகொள்ள மறுத்துவிட்டனர். ரஜினிகாந்த் அழைப்பிதழை கூட வாங்கிக்கொள்ளவில்லை.
நாம் தமிழர் இயக்கம் மற்றும் பல அமைப்புகளும் குரல் கொடுத்ததால் இந்திய திரையுலகத்தினர் இலங்கை விழாவை புறக்கணித்தனர்.
சில துக்கடாக்கள் மட்டும் இலங்கை சென்றது.
தடையை மீறி இந்தி நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், விவேக் ஒபராய், சல்மான்கான், சஞ்சய்தத், கரீனாகபூர், பிபாசா பாசு, ரிதேஷ் தேஷ்முக், சீமாகான் போன்றோர் இலங்கை விழாவில் பங்கேற்றனர்.
இதனால் சென்னையில் சத்தியம், ஈகா, பி.வி.ஆர்., ஐநாக்ஸ் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்த ஹிரித்திக் ரோஷனின் கைட்ஸ் படத்தை ஓடவிடாமல் செய்துவிட்டனர்.
இதையடுத்து சல்மான்கான் படங்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, புதுவை ஆகிய 5 மாநிலங்களிலும் தடைவிதிக்கப்படுகிறது.
சல்மான்கான் நடித்து வரும் பந்தா ஏக் பிந்தாஸ் என்ற படம் ஜூலை 9-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர் நடிக்கும் டாபங்க் என்ற படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. இவ்விரு படங்களும் 5 மாநிலங்களிலும் ரிலீசாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக