05 ஜூன் 2010

மகிந்தவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசவுள்ளதாம்!


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளை மறுதினம் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.அரசியல் தீர்வு மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் சிறைச்சாலைகளில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பிலேயே தாம் கலந்துரையாட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வலியுறுத்தும் விடயங்கள் குறித்து பேசுவதற்கு நாளை ஞாயிற்றுக்கிழமை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக