04 ஜூன் 2010

இந்தி திரைப்படங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன!


தமிழ் நாட்டில் பல வருடங்களுக்கு முன்னர், கருணாநிதி தலைமையில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. இந்தியில் எழுதப்பட்ட பதாகைகளுக்கு தார் பூசினார். இருப்பினும் தனது அரசியல் நலன் காரணமாக தற்போது, இந்திரா காங்கிரசுடன் இணைந்து மத்திய அரசுடன் சொந்த உடன்பிறப்புகளான தமிழர்களை காட்டிக்கொடுத்தும் வருகிறார். இந்நிலையில் இலங்கையில் நடைபெற இருக்கின்ற இந்திய திரைப்படவிழாவில் சில இந்தி நடிகர்கள் தமிழ் நாட்டில் எழுந்த அழுத்தங்களையும் மீறி இலங்கை சென்றுள்ளனர்.இதனால் இன்று சில இந்திப் படங்களை வெளியிட்ட சென்னை திரையரங்குகளை நாம் தமிழர் அமைப்பினர் முற்றுகையிட்டனர். இதனால் அத் திரையரங்குகள் தாம் போடவேண்டிய இந்திப் படங்களை இன்று போடாமல் காட்சிகளை ரத்துச் செய்துள்ளன. சென்னையில் உள்ள "ஈகா" மற்றும் பி.வி.ஆர் திரை அரங்கம் என்பனவே இவ்வாறு தமது படங்களை ரத்து செய்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக