03 ஜூன் 2010

உத்தியோகபூர்வ அழைப்பு கிடைத்தால் அரசுடன் பேசுவோம்!


அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ அழைப்புக் கிடைத்தால் மட்டுமே தாம் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்துக் கலந்தாலோசிப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அரசாங்கம் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் வெறுமனே அறிக்கைகளை விடுப்பதால் பலனில்லை. எனவே, அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தொடர்பில் எந்தவித உறுதியான முடிவையும் கூறமுடியாது என அவர் மேலும் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்கள் தொடர்பில் அவரிடம் கேட்ட போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக