22 ஜூன் 2010

முள்ளிவாய்க்கால் நினைவாக மாணவர் தற்கொலையாம்!ஆனாலும் மாணவர் மத்தியில் சந்தேகம்.


சென்னை கவின் கல்லூரி வளாகத்தில் உள்ள மரம் ஒன்றில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. சென்னை எழும்பூர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அரசுக்கலை மற்றும் நுண்கலை கல்லூரி உள்ளது. இதற்கு கவின் கல்லூரி என்றும் பெயர். இந்த கல்லூரி வளாகத்தில் உள்ள மரம் ஒன்றில் இன்று காலை மாணவர் ஒருவர் தூக்கில் கொண்டிருந்தார். போலீசார் விரைந்து வந்து பிரேதத்தைக் கைப்பற்றினர். அப்போது தூக்கிட்டுக் கொண்ட மாணவர் எழுதிய 10 பக்க கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில் அவர் எழுதியிருப்பதாவது: உலக இனத்தில் தமிழ் இனம் தலை சிறந்த இனமாகும். உழைப்பதற்காக வாழ்ந்த உயர் தமிழன் அடிமைப்பட்டு கிடப்பதா ? பாலைவனத்தை சோலைவனமாக மாற்றும் மந்திரவாதிகள் தமிழர்கள். முள்ளிவாய்க்கால் சம்பவத்தை உலகம் மறந்தாலும் நாம் மறக்க கூடாது. வீடு தோறும் மரம் வளர்ப்போம். இல்லையென்றால் குடிநீர் விற்பனையாவது போல, காற்றும் வியாபாரமாகி விடும். மரம் எழுப்பும் கொள்கைக்காக என்னையே சமர்ப்பிக்கிறேன். எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள். வாழ்த்தி வழியனுப்புங்கள். தயவு செய்து எனது உடல் உறுப்புகளை தானம் கொடுத்துவிடுங்கள். பிறந்த பூமியில் என்னை தவழ விடுங்கள். அசையாத புகைப்படமாக இருப்பதைவிட அசைந்தாடும் மரமாக நான் எழுவேன். நிகழ்காலமே எதிர்காலத்திற்கு நீ நிழல் கொடு. தமிழே உனக்கு தெரியாமல் உன்னை நான் நேசிக்கிறேன் என்று எழுதியுள்ளார் சசிக்குமார். சசிக்குமாரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிவரும் கவின்கல்லூரி மாணவர்கள், ‘சசிக்குமார், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் போது, கண்காட்சியில் வைப்பதற்காக 1330 திருக்குறள்களை சுடுமண் சிற்பம் ஒன்றில் உருவாக்க ஒராண்டாகப் பாடுபட்டு வந்து, அதை முடித்துவிட்டார். ஆனால், அதற்கான அனுமதியை கல்லூரி நிர்வாகம் அளிக்காததால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம்’ என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக