17 ஜூன் 2010

தமிழை வழக்காடு மொழியாக்க அன்றே கோரினேன்.-ராஜேந்தர்.


உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கோரி தமிழகமெங்கிலும் போராட்டம் நடந்து வருகிறது. இது குறித்து லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில், ’’சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துகின்றனர். நீதிமன்ற நடவடிக்கைகள் தமிழில் அமைய சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானம் ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு கிடப்பிலேயே கிடக்கிறது.
இதை உடனடியாக நிறைவேற்றும் படி அன்றே நான் குரல் கொடுத்தேன். இப்போதுதான் ஆட்சியாளர்களுக்கு ஞானோ தயம் வந்துள்ளது’’என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக