08 ஜூன் 2010

மகிந்தவிற்கு எதிர்ப்பு திருமாவளவன் உட்பட பல கட்சினர் கைது!


இலங்கை அதிபர் ராஜபக்சே மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
மயிலாடுதுறையில் ராஜபக்சே உருவமொம்மை எரித்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் பேரணி செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சியினர் கைது.தேனியில் ராஜபக்சே உருவமொம்மை எரித்த தமிழ் புலிகள் அமைப்பினர் கைது.
ஓசூரி மதிமுக, தமிழ் தேசிய பொதுவுடமை கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொல்.திருமாவளவன் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக