04 ஜூன் 2010

தமிழ் திரையுலகினர் கலந்து கொள்ளாமையால் விவேக் ஒபராய் கவலையாம்.


கொழும்பில் நடைபெறும் சர்வதேச திரைப்படவிழாவை தமிழ்த் திரையுலகம் புறக்கணித்தது கவலை அளிக்கிறது என்று பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் கூறியுள்ளார்.
விருது வழங்கும் விழா இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது.
தமிழ் அமைப்புகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அமிதாப் பச்சன், கமல்ஹாசன், மணிரத்னம், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் கொழும்பு செல்லவில்லை என்றாலும், இந்த விழாவிற்கு இந்தி திரையுலகைச் சேர்ந்த சல்மான் கான், விவேக் ஓபராய், ஹிருத்திக் ரோஷன், சுனில் ஷெட்டி உள்ளிட்டவர்கள் சென்றுள்ளனர்.
கொழும்பில் நடைபெறும் சர்வதேச திரைப்படவிழாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விவேக் ஓபராய்,
‘எனக்கும் தமிழகத்திற்கும் நெருங்கிய உறவு இருக்கிறது. இந்த திரைப்பட விருது வழங்கும் விழாவை தமிழ்த் திரையுலகினர் புறக்கணித்தது கவலையளிக்கிறது’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக