18 ஜூன் 2010

யாழ்,பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது முறைகேடாக நடந்துகொள்ளும் விரிவுரையாளர்களுக்கு எச்சரிக்கை!



யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நால்வருக்கு எதிராக, 'இறுதி எச்சரிக்கை - பல்கலைக்கழக மாணவர் சமூகம்' என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்று ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழக மாணவிகள் மீது குறிப்பிட்ட சில விரிவுரையாளர்கள் மேற்கொண்டு வரும் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளைக் கண்டிக்கும் முகமாகவே இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, பல்கலைக்கழக மாணவிகள் மீது பாலியல் துஷ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்படுவது தடுக்கப்பட வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக