07 ஜூன் 2010

பிரயோசனமற்று முடிவடைந்த பேச்சு வார்த்தை!








தமிழத்
தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இன்று மாலை இடம்பெற்ற சந்திப்பு இணக்கம் எதுவும் இன்றி முடிவடைந்துள்ளது.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது அரசியல் தீர்வு, மீள்குடியேற்றம், அத்துமீறிய குடியேற்றம், அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கல், அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக்குடியமர்த்தல், அரசியல் அமைப்பு சீர்திருத்தம் போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக பேசப்பட்ட போதும் ஆழமான விடயங்கள் எவையும் ஆராயப்படவில்லை.
இந்தநிலையில், பயங்கரவாதிகளின் தீர்வோ அல்லது பிரபாகரனின் தீர்வோ இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குதல் தொடர்பாக பேசப்பட்ட போது ஏற்கனவே இரண்டு பேருக்கு தாம் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தபோதும் அவர்களில் ஒருவர் மாத்தறையில் இருந்து உளவுப்பணிகளில் ஈடுபட்டமை தொடர்பில் தம்மிடம் ஆதாரம் இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
லண்டனில் உள்ள அமைப்புகள், தற்போது ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இந்தநிலையில் பொதுமன்னிப்பு வழங்கி அரசியல் கைதிகளை விடுவித்தால், அவர்களும் குறித்த அமைப்புகளில் இணைந்து நாட்டுக்கு எதிராக செயற்படும் நிலை ஏற்படும் என ஜனாதிபதி பதிலளித்தார்.
அவை, குறித்த கைதிகளை இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தக்கூடிய ஆபத்து உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எனவே இந்த விடயத்தில் ஆராய்ந்தே முடிவெடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டார் இதனை தவிர அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்றம், மீள்குடியேற்றம் உட்பட்ட பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதியிடம் இருந்து நம்பிக்கைக்குரிய பதில்களை எதிர்பார்க்க முடியவில்லை என சந்திப்பில் பங்கேற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் மீண்டும் பேசுவது என்ற அடிப்படையில் இன்றைய பேச்சுவார்த்தை நிறைவுக்கு வந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக